Monday 13 June 2016

உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸ் திமுக உறவு தொடரும் - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி


சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது. முதல்வர் ஜெயலலிதா டெல்லிக்கு போய் பிரதமரை சந்திப்பது அவருக்கு தனிப்பட்ட முறையில் உபயோகப்படுமே தவிர தமிழக மக்களுக்கு எந்த வித பயனும் விளைய போவதில்லை .

தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும். தமாகாவிலிருந்து வரும் நண்பர்களுக்காக காங்கிரஸ் கட்சியின் கதவுகள் திறந்தே இருக்கிறது. திமுகவுக்குள் அதன் தலைவர் கருணாநிதிக்கும், பொருளாளர்  ஸ்டாலினுக்கும் மோதல் என்றெல்லாம் சொல்கிறார்கள் , ஆனால் அவர்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை சகஜமாகதான் உள்ளனர். என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment