Sunday 19 June 2016

மக்கள் நலக்கூட்டணியை கை கழுவினார் வாசன்? - சென்னையில் பேட்டி


மக்கள் நலக்கூட்டணியில் இப்போதைக்கு இல்லை என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சூசகமாக  தெரிவித்தார். 

மக்கள் நலக்கூட்டணி தமாகா, தேமுதிக ஒரே அணியாக தேர்தலை சந்தித்தது. ஆனால் கூட்டணியினால் ஒரு இடத்தை கூட கைப்பற்ற முடியவில்லை. போட்டியிட்ட அனைவரும் தோல்வியை தழுவினர். தமாகா காங்கிரசை விட குறைவாக வாக்குகளை பெற்றது.
 இதனால் தமாகாவுக்குள் கூட்டணி குறித்த சர்ச்சைகள் எழுந்தது. இதையொட்டி கடந்த 4 ஆம் தேதிமுதல் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் என கட்சியின் அனைத்து அணிகளின் கூட்டத்தையும் வாசன் கூட்டி ஆலோசனை நடத்தினார்.
 இந்த ஆலோசனை கூட்டங்களில் ஒட்டுமொத்த கட்சி அணியினரும் கூட்டணியை விட்டு வெளியேறணும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. 


சமீப காலமாக கூட்டணியை விட்டு வெளியேறி திமுகவுடன் சேர்ந்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்கலாம் என்ற எண்ணத்தில் வாசன் வந்துள்ளதாக அவரது கட்சி நிர்வாகிகள் தெரிவிக்ர்கின்றனர். ஆனால் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளதால் இதை எப்படி எதிர்கொள்வது என யோசித்து வருகிறார்.

ஆனாலும் கட்சி அணி உடையாமல் இருக்க மக்கள் நலக்கூட்டணியில் இருந்து வெளியேறுவதுதான் தற்போதைய முதல்கட்ட நடவடிக்கை என நெருக்கமான கட்சி நிர்வாகிகள் தெரிவித்த ஆலோசனை அடிப்படையில் முதல் கட்டமாக கவுரவமாக மக்கள் நலக்கூட்டணியை விட்டு வாசன் வெளியேறும் அறிவிப்பை வெளியிட்டார். 

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: 
மரியாதைக்குரிய வைகோ , ஜி.ஆர். முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்டோர் கடந்த ஜனவரி மாதம் மக்கள் நலக்கூட்டணியில் இணைய கேட்டுகொண்டதன் அடிப்படையில் தமாகா தொகுதி உடன்படிக்கைக் உடன் பாடு வைத்து கொண்டது. கூட்டணியில் இருந்தாலும் தனித்தனி தேர்தல் அறிக்கை வெளியிட்டோம்.


 எனவே எங்களது ஆறு கட்ட ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நலக்கூட்டணி தொடருமா? தொடராதா? என்ற பேச்சு எழவில்லை. தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நலக்கூட்டணிக்கு நன்றியும் தெரிவித்துள்ளோம்.

தற்போது எங்கள் தலைவர்கள் சொன்னது கட்சியை பலப்படுத்தும் வேலையில் தற்போது ஈடுபட வேண்டும். கூட்டணி தேர்தல்களில் வரும் போகும். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு இப்போது வரவில்லை, ஆகவே உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு நேரத்தில் இது குறித்த  முடிவு எடுக்க்கலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.

 தற்போதைய எங்களது நிலைபாடு தனித்து நின்றால் எப்படி செயல்பாடோ அவ்வாறு செயல்படுவது. கட்சியை வலுப்படுத்துவது முதற்கட்ட வேலை என்று ஆலோசித்துள்ளோம். 32 மாவட்டங்களின் மூத்த முன்னணி, மாநில மாவட்ட மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளேன். ஜூலை இறுதிக்குள் இந்த கூட்டங்கள் முடிவடையும், என தெரிவித்தார். 

இதன் மூலம் மக்கள் நலக்கூட்டணியில் தாங்கள் இப்போது இல்லை என்பதை வாசன் அவர் பாணியில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment