Sunday 19 June 2016

ஓசூர் காவலர் முனுசாமி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி -சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு


ஓசூரில் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் உயிரிழந்த தலைமை காவலர் முனுசாமியின் குடும்பத்திற்கு ரூ 1 கோடி நிதி உதவி வழங்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


 காவலர் முனுசாமியின் குடும்பத்துக்கு அரசு விதியின் படி ரூ.5 லட்சம் வழங்கினோம் ஆனால் அது அவரது குடும்பத்திற்கு பயன் நிவாரணமாக அமையுமா என்ற கருத்தின் அடிப்படையில் ரூ 1 கோடி நிவாரண தொகை அளிக்கவும் அவரது மகள் படிப்புச்செலவை அரசே ஏற்கும் எனவும் 110 வது விதியின் கீழ் முதல்வர் அறிவித்தார். 
 காவலர் முனுசாமிக்கு வழங்கப்பட்ட ரூ.5 லட்சம் உதவி தொகை குறித்த காவலர்களின் அதிருப்தியையும், காவலர்களே அவர்களுக்கான நலநிதியாக ரூ 1 கோடி திரட்டும் திட்டம் குறித்தும் தமிழ் நியூஸ் 1 செய்தியாக வெளியிட்டது. 


இது காவலர்கள் மத்தியிலும் வைரலாக பரவியது. தமிழக அரசுக்கும் இந்த கோரிக்கை சென்றது. இதன் விளைவு தமிழக அரசு ரூ.1 கோடி உதவி தொகை அறிவித்துள்ளது. தமிழ்நியூஸ்1 செய்திக்கு காவலர்கள் தமது நன்றியை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment