பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதல்வர் ஜெயலலிதா இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். காலை 11 மணிக்கு புறப்பட்ட தனி விமானம் மதியம் டெல்லி விமான நிலையத்தை சென்றடைந்தது. அங்கு அவருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் வரவேற்றனர். தொடர்ந்து, அங்கிருந்து தமிழ்நாடு இல்லம் சென்ற அவருக்கு பெண் எம்பிக்கள் சார்பில் மலர் மாலை அணிவிக்கப்பட்டது, மலர்கொத்து அளித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கிருந்த காவலர்கள் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளித்தனர். மேலும், பூரண கும்ப மரியாதை உள்ளிட்ட உற்சாக வரவேற்பும் தமிழக முதல்வருக்கு அளிக்கப்பட்டது. . அவருடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பி.ராமமோகனராவ், நிதித் துறை செயலாளர் சண்முகம் ஆகியோரும் சென்றிருந்தனர்.
No comments:
Post a Comment