Tuesday 7 June 2016

தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம் - மேலும் தொடர வாய்ப்பு


கட்சி தோற்ற மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை ஜெயலலிதா நீக்கி வருகிறார். இதில் முதல் கட்டமாக நீலகிரி மாவட்டத்தில் ஆரம்பித்துள்ளார். உதகை, குன்னூர் நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
அதிமுக மோசமாக தோற்ற மாவட்டத்தில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட நிர்வாகிகள் குறித்து தகவல்கள் வேக வேகமாக சேகரிக்கப்பட்டு வருகிறது. உளவுத்துறை மூலம் திரட்டப்பட்ட தகவல்கள் மற்றும் கட்சி அணியினர் புகார் அடிப்படையில் இந்த மாற்றம் நடந்துள்ளது. இதில் முதல் கட்டமாக நீலகிரி மாவட்டத்தில் பல கட்சி நிர்வாகிகள் அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். உதகமண்டலம் குன்னூர் நிர்வாகிகள் அதிக அளவில் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளனர். இந்த நீக்கங்கள் தொடரும் இன்னும் பல மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் நீக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. 
முக்கியமாக சென்னை, காஞ்சிபுரம், மற்றும்வடக்கு மாவட்டங்களில் அதிக அளவில் இருக்கும் என்கின்றனர். 

No comments:

Post a Comment