Tuesday 7 June 2016

ஒரு மணி நேர மழைக்கே சென்னை ததிங்கினத்தோம் - சாலைகளில் வெள்ளநீர் டிரபிக் ஜாம்

சென்னையில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மாலை 6 மணிக்கு மேல் ஒரு மணி நேரம் சென்னை முழுதும் மழை கொட்டி தீர்த்து விட்டது.


இதனால் சென்னை முழுதும் பல இடங்களில் நீர் தேங்கியது. பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்திற்குள்ளாகினர். சென்னையில் நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, போரூர், கே.கே.நகர், வளசரவாக்கம், புதுப்பேட்டை ,சிந்தாதிரிப்பேட்டை , வடபழனி நூறடி சாலை,
வடசென்னை பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


 மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு செல்பபவர்கள் கடுமையான சிரமத்துக்கு ஆளாகினர்.

No comments:

Post a Comment