Friday 24 June 2016

நுங்கம்பாக்கம் இளம்பெண் கொலை - கூலிப்படை செயலா ? புதிய தகவல்








நுங்கம்பாக்கம் ரயில்வே நிலய பிளாட்பாரத்தில் இளம் பெண் வெட்டி கொல்லப்பட்ட விஷயம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகலாத பல மர்மங்களும், போலீசார் திசை திருப்பலும் எங்கே போய் முடிய போகிறது என்ற நிலையில் பொதுமக்கள் இருக்கின்றனர்.



எங்கே பாதுகாப்பு
சூளைமேட்டில் வசித்த சுவாதி(23) இன்று காலை மர்ம ஆசாமி ஒருவனால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார் .காலையில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த கொலையில் கொலையாளியின் அடையாளத்தையோ, கொலையாளியை பிடிக்கவோ யாரும் முன் வரவில்லை.ரெயில் நிலையத்திலும் கண்காணிப்பு கேமரா இல்லை. போலீசாரும் ஸ்டேஷனில் இல்லை.

கூலிப்படை வெறிச்செயல்?
ஸ்வாதி ரெயில் நிலையத்துக்குள் நுழைந்தவுடன் சம்பந்தப்பட்ட நபர் ஸ்வாதியிடம் ஏதோ கேட்டதாகவும் அதற்கு ஸ்வாதி பதிலளித்ததாகவும் அதன் பின்னரே பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்டியுள்ளான். புதிதாக கொலை செய்பவன் பதற்றத்தில் கண்டபடி வெட்டுவான். வெட்டின் தன்மையும் வித்யாசப்படும். வெட்டு வாங்குபவர் தப்பிக்க முயற்சி செய்வார், ஆனால் கூலிப்படையினர் வெட்டுவதே முகம் அல்லது தலையில் தானிருக்கும் அந்த வெட்டும் கடுமையாக இருக்கும் என்கிறார் சம்பவத்தை ஆராய்ந்த காவல் அதிகாரி ஒருவர்.



கொலையாளி வீசிய அரிவாள்  ஸ்வாதியின்  தாடையில் வெட்டியது தாடையே துண்டானது.சம்பவ இடத்திலேயே வேரறுந்த மரம் போல் ஸ்வாதி சாய்ந்துள்ளார். தேர்ந்த கொலையாளி மட்டுமே இவ்வாறு கொலை செய்ய முடியும்.பின்னர் எவ்வித பதற்றமும் இல்லாமல் கொலையாளி அங்கிருந்து சென்றுள்ளான்.

புதிய தகவல்
கொலையாளிக்கு ஸ்வாதியை அடையாளம் தெரியாததால் நீதான் ஸ்வாதியா என்று கேட்டபின்னர் தான் கொலை நடந்துள்ளது என்ற தகவல் கிடைத்ததாக சொல்கிறார்கள்,  அப்படியென்றால் அறிமுகமில்லாத  ஏவி விடப்பட்ட ஒருவன் தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும்.
கொலையாளி தனது வேலை முடிந்த பின்னர் ஸ்வாதியின் செல்போனை எடுத்து சென்றுள்ளான்.

இதன் மூலம் ஸ்வாதியின் செல்போனில் உள்ள ஏதோ  சில தகவல்கள் படங்கள் வீடியோ காட்சி பதிவுகள் யாருக்காவது தேவைப்பட்டிருக்கலாம்.  அல்லது ஏதோ ஒரு தகவல் போலீஸ் கையில் கிடைத்து விடக்கூடாது என்பதாக இருக்கலாம்.
கொலையாளி கோடம்பாக்கம் அருகே அரிவாளை வீசிவிட்டு சென்றதாகவும், போலீஸ் அதை கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 சாலையில் நடந்து சென்றவன் மீண்டும் கோடம்பாக்கம் அருகே தண்டவாளத்துக்கு சென்று அரிவாளை வீசிவிட்டு செல்வானா? இது போன்ற ஏராளமான சந்தேகங்களுக்கு மத்தியில் ஒரு வாலிபன் செல்லும் புகைப்படத்தையும் வீடியோ காட்சி ஒளிப்பதிவையும் வெளியிட்டு இவர் குற்றவாளியாக இருக்கலாம் என்று ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.


விசாரணை சரியான திசையில் செல்ல வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.

No comments:

Post a Comment