ஸ்வாதி கொலை வழக்கில் கொலையாளி சிக்கியதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒட்டன் சத்திரம் யூனியன் அலுவலகம் அருகே ஒரு கும்பல் மூன்று வாலிபர்களை பிடித்து வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றியுள்ளது.
அப்போது நடந்த தள்ளு முள்ளுவை பார்த்த பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வாலிபர்களை ஒரு கும்பல் கடத்த முயல்வதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்க உடனடியாக லோக்கல் போலீசார் வந்துள்ளனர்.
அவர்கள் காரில் வந்த கும்பலிடம் யார் நீங்கள் ஏன் இவர்களை வாகனங்களில் ஏற்ற பார்க்கிறீர்கள் என்று கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது போலீசாரிடம் காரில் வந்தவர்கள் தாங்கள் தனிப்படை போலீசார் ஸ்வாதி கொலை வழக்கு விஷயமாக வந்துள்ளோம் என்று கூறியதாக கூறப்படுகிறது.
பின்னர் போலீசார் அவர்களை போக அனுமதித்ததாகவும் அவர்களில் ஒருவனை மட்டும் தனிப்படையினர் சென்னைக்கு அழைத்து வருவதாகவும் உறுதிபடுத்தப்படாத தகவல் கூறுகிறது.
No comments:
Post a Comment