Tuesday 28 June 2016

மதேமுதிக திமுகவில் கரைகிறது - சந்திரகுமார் பேட்டி


மக்கள் தேமுதிக விரைவில் திமுகவில் இணைகிறது , இதற்காக திமுக பொருளாளர் ஸ்டாலினுடன்  அதன் நிர்வாகிகள்   பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஸ்டாலினை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரகுமார் கூறியதாவது: 

 மக்கள் தேமுதிகவை, திமுகவில் இணைக்கும் தீர்மான நகலை தற்போது ஸ்டாலிடன் வழங்கி உள்ளோம். நாளை காலை திமுக தலைவர் கருணாநிதியை அறிவாலயத்தில் சந்திக்க உள்ளோம். அப்போது திமுகவுடன் இணையும் தேதி தெரிய வரும்.

 அதன்பின்னர் தமிழகம் முழுவதும்சுற்று பயணம் மேற்கொண்டு தேமுதிக அதிருப்தியாளர்களிடம் பேசி திமுகவில் ஒட்டு மொத்தமாக இணைய உள்ளோம்.
தற்போது தேமுதிக கூடாரம் கலகலத்து போய்விட்டது. 

மேலும் தற்போது 14 மாவட்ட செயலாளர்களின் கடிடமும் புயலை விசுவதால், தொண்டர்களை திசை திருப்பும் விதமாக தற்போது எங்கள் மீது டி.ஐ.பி. அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில் துளி கூட உண்மை இல்லை. வீண் பழி சுமத்தப்பட்டுள்ளது இதை சட்ட ரிதியாக சந்திக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment