Tuesday 28 June 2016

ரூ.1500 கோடி சொத்து விஜயகாந்தை அலற வைத்த கடிதம் - டிஜிபி அலுவலகத்தில் புகார்


தேமுதிக தலைவர் விஜயகாந்த் பற்றி மாவட்ட செயலாளர்கள் எழுதியது போல் விஜயகாந்துக்கு  9 பக்க கடிதம் ஒன்று வந்தது. அதில் விஜயகாந்தை நம்பி வந்த தாங்கள் விஜயகாந்தால் பாதிக்கப்பட்டது குறித்தும் , கட்சிக்காக தாங்கள் வசூலித்த பணத்தை கட்சியின் அறக்கட்டளை என்ற பெயரில் தாங்கள் தங்கள் மனைவி மச்சான் மட்டுமே அனுபவித்து வருகிறீர்கள் என்கிற ரீதியில் செல்லும் கடிதம் விஜயகாந்த் சமீபத்தில் வாங்கிய சொத்துக்களை பட்டியல் இட்டுள்ளது.

கடிதம் எழுதியது யார் என்று தெரியாத நிலையில் கடிதம் வைரலாக பரவி உள்ளது.இது குறித்து தேமுதிக தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி தலைமையில் மாவட்ட செயலாளர் காமராஜ், செந்தில்குமார் உள்ளிட்ட 13 மாவட்ட செயலாளர்கள்  டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.


புகாரில் மாவட்ட செயலாளர்கள் பெயரில் தவறான கருத்துக்களை பரப்பும் வகையில் கடிதம் எழுதப்பட்டுள்ளது, அதில் உள்ள எண்கள் மதேமுதிக நிர்வாகிகள் விலாசம் காண்பிக்கிறது, மேலும் கடிதத்தில் உள்ள தகவல்களை விசாரிக்காமல் ஊடகங்கள் , பத்திரிக்கைகள் பிரசுரித்துள்ளன அவைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் கேட்டுள்ளனர்.

டெய்ல் பீஸ்: புகார் கொடுக்கப்போவது குறித்து கடைசிவரை யாருக்கும் சொல்லாமல் ரகசியம் காத்து டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

No comments:

Post a Comment